ராமேஸ்வரம்: ஆளில்லா உளவு விமானம் சோதனை

இந்த விமானத்தின் சோதனை பாம்பன் தெற்குவாடி கடற்கரை பகுதியில் நடைபெற்றது. அரோரா நிறுவனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் அய்யர், பிரவீன் ஆகியோர் கடற்கரையில் இருந்தபடி இயக்கி, விமான சோதனையை நடத்தினர்.
2.5 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட குட்டி விமானத்தின் எடை 3 கிலோ உள்ளது. மேலும், துப்பாக்கிக் குண்டு துளைக்காமலும், கீழே விழுந்தால் சேதமடையாத வகையிலும் ஃபைபர் மூலம் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆளில்லாத விமானம் மூலம் கடல் பாதுகாப்பு மட்டுமின்றி, நிலப் பகுதியையும் ஆய்வு செய்ய முடியும். 10 கி.மீ. சுற்றளவை கண்காணிப்பதோடு, சுமார் 1 கி.மீ. தூரம் உள்ள படகுகளை துல்லியமாகப் படம் பிடிக்கும்.
இரவிலும் படம் பிடிக்கும் வகையில் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்த விமானத்தால் ஒரு மணி நேரம் வரை கடல் மீது பறக்க முடியும்.
ராமேஸ்வரம் கடலில் பாதுகாப்புப் பணிக்காக இந்த ஆளில்லாத உளவு விமானம் பயன்படுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications