போனஸ் கிடைக்காமல் புலிகள் காப்பக ஊழியர்கள் தவிப்பு
Subscribe to Oneindia Tamil
களக்காடு: களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகங்களில் 110 வேட்டை தடுப்பு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் தற்காலிகமாக முறைப்படி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இதுவரை பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. அனைத்து துறைகளிலும் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஆணைமலை, முதுமலை புலிகள் காப்பகங்களில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்பட்டு்ள்ளது.
ஆனால் களக்காடு, முண்டன்துறை புலிகள் காப்பகங்களில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு அவை வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் தமிழக முதல்வர் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications