'பிரேக்' ஜக்கியைக் கொல்ல காத்திருந்த 'சைலன்ட்' சுனில் கைது!
பெங்களூர்: பிரேக் ஜக்கி என்ற ரவுடியைக் கொல்லக் காத்திருந்தபோது பிரபல ரவுடி சைலன்ட் சுனில் மற்றும் அவனது கும்பலைச் சேர்ந்த சாம்பார் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
தர்மபுரி, சுப்பிரமணிய நகர், மில்க் காலனி பகுதியில் வைத்து இந்தக் கும்பல் பிடிபட்டது.
சைலன்ட் சுனில், பெங்களூர் காயத்ரிநகரைச் சேர்ந்தவன். பிரபல ரவுடி. இவன் மீது, கொலை, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி என கிட்டத்தட்ட 18 வழக்குகள் உள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி எலஹங்கா பகுதியில் உள்ள ஒரு ஜிம்மில் வைத்து தனது போட்டி ரவுடிக் கும்பலின் தலைவனான புல்லட் ரவியையும், அவனது கூட்டாளி சீனிவாசா என்பவனையும் போட்டுத் தள்ளி விட்டு தலைமறைவாகி விட்டான் சைலன்ட் சுனில்.
அவனைப் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், தர்மபுரியில், போட்டி ரவுடிக் கும்பலைச் சேர்ந்த பிரேக் ஜக்கி என்பவனைக் கொல்ல சுனில் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து விரைந்து சென்ற பெங்களூர் போலீஸார் ஜக்கியைக் கொல்லக் காத்திருந்த சுனில், கூட்டாளிகளான குமார் என்கிற சாம்பார், மாதவ், பாலசுப்ரமணியா, மஞ்சுநாத் ஆகியோரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து நான்கு கத்திகள், ஐந்து மொபைல் போன்ள், ஒரு ரிவால்வர், கத்தி, 3 புல்லட்கள், ஹூண்டாய் வெர்னா கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications