விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க புதிய தமிழகம் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், 'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி ஏப்ரல் முதல் வாரத்தில் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளோம்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள கனடா, நார்வே, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழர்களை அழைக்க உள்ளோம்' என்றார்.












Click it and Unblock the Notifications