ஜெவுடன் வைகோ சந்திப்பு-இடைத் தேர்தல் குறித்து ஆலோசனை

போயஸ் கார்டனி்ல் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்தது. சுமார் 1 மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின்போது பென்னாகரம் இடைத் தேர்தல், முல்லைப் பெரியாறு அணை விவகாரம், அரசியல் நிலவரம் ஆகியவை குறித்து இருவரும் பேசினர்.
'ஜெ சுவர் விளம்பரம்'-அதிமுகவினர் அடிதடி!
ஜெயலலிதாவின் பிறந்த நாள் சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சேடப்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. துரைராஜின் மகன்கள் தனராஜன், ரமேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றிய அதிமுக மாணவரணி செயலாளராக இருந்து வருபவர் தெய்வேந்திரன்.
பிப்ரவரி 24ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி ஒன்றிய பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுகவினர் விளம்பர போர்டுகள் வைத்துள்ளார்.
ஆனால், இதில் பலர் ஏராளமான இடங்களில் முறையான அனுமதி பெராமல் ஜெயலலிதாவை வாழ்த்தி சுவர் விளம்பரங்களும் செய்துள்ளனர்.
சுவர் விளம்பரங்கள் செய்வதில் தெய்வேந்திரனுக்கும் சேடப்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான துரைராஜின் மகன்கள் தனராஜன், ரமேஷ் ஆகியோருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
இந் நிலையில் கவனம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் தெய்வேந்திரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எம்.எல்.ஏ.வின் மகன்கள் தனராஜன், ரமேஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் விமல், வினோத் ஆகிய 4 பேரும் சேர்ந்து தெய்வேந்திரனை கண்மூடித்தனமாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
இதையடு்த்து அவர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின்பேரில் உசிலம்பட்டி நகர போலீசார் எம்.எல்.ஏவின் மகன்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications