வளர்ச்சி அதிகரிக்கும்.... விலைவாசியும்தான் - பொருளாதார ஆய்வறிக்கை தகவல்

2010-11ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார்.
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக கருதப்படும் இந்தியாவில் வரும் 2014ம் ஆண்டு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் நிச்சயமாக இரட்டை இலக்கைத் தொட்டுவிடும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டு 2010-11ல் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 9 சதவீதத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த சில மாதங்களுக்கு உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உணவுப் பொருள் பணவீக்கம் 18 சதவீதத்தை தொட்டிருப்பதற்கு காரணம், உணவு நிர்வாக கொள்கைகளே காரணம் என அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் காணப்படும் வறுமை மற்றும் ஏழைகளின் எண்ணிக்கை மிகவும் முரண்பாடானது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உணவு மானியங்கள் பொது வினியோக திட்டத்தின் மூலம் வழங்குவதற்கு பதிலாக, நேரடியாக வீடுகளுக்கு போய் சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.
ஏழை மக்களுக்கு உணவு கூப்பன்களை வழங்கி, அதன் மூலம் எந்த கடையில் வேண்டுமானாலும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதியை உருவாக்க வேண்டும்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் வெளிநாட்டு மூலதனத்தை ஊக்குவிக்கும் தாராளமயமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications