இந்தியர் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல்-முக்கிய குற்றவாளி டாக்காவில் கைது

1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காத்மாண்டுவில் இருந்து டெல்லி வந்த விமானத்தை தீவிரவாதிகள் கடத்தினர். அதை ஆப்கானிஸ்தானின் காண்டஹார் விமான நிலையத்தில் சிறை வைத்தனர்.
பயணிகளை விடுவிக்க காஷ்மீர் சிறையில் இருந்த ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தீவிரவாத இயக்கத் தலைவரான மெளலானா மசூத் அசார் உள்ளிட்ட 3 பேரை இந்திய அரசு விடுவித்தது. அந்தத் தீவிரவாதிகளை அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கே தனி விமானத்தில் காண்டஹாரில் சென்று விடுவித்துவிட்டு வந்தார்.
கிட்டத்தட்ட 1 மாத சிறை பிடிப்புக்குப் பின் விமானமும் பயணிகளும் மீட்கப்பட்டனர்.
இந் நிலையில் இந்தக் கடத்தலில் தொடர்புடைய பிலால் மண்டோல் என்ற நன்னு மியாவை வங்கதேச போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர் தவிர ஜெய்ஷ் ஏ முகம்மத் அமைப்பின் வங்கதேச ஒருங்கிணைப்பாளரான ரிஸ்வான் அகமத் உள்ளிட்ட மேலும் 4 பேரையும் வங்கதேச அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இதில் நன்னு உள்ளிட்ட 4 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். ரிஸ்வான் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.
இதில் நன்னு மீது இந்தியாவில் 4 தீவிரவாத வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கில் கைதாகி 10 ஆண்டுகள் குவஹாத்தி சிறையில் இருந்துள்ளான்.












Click it and Unblock the Notifications