'திமுக-இஸ்லாமியர் உறவை யாராலும் பிரிக்க முடியாது'-மைதீன் கான்
அம்பாசமுத்திரம்: திமுகவிற்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையேயான தொடர்பை யாராலும் பிரிக்க முடியாது என்று அமைச்சர் மைதீ்ன்கான் கூறினார்.
கல்லிடைக்குறிச்சியில் சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை சார்பில் மிலாது விழா, மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஆலிம் பட்டம் பெற்ற மெளலவிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
பேரவை கவுரவ ஆலோசகர் சத்தார் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் மைதீன்கான் மனப்பாடம், பேச்சு மற்றும் கட்டுரை போட்டுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில்,
திமுகவிற்கும், இஸ்லாமியர்களுக்கும் இயற்கையாகவே தொடர்பு உண்டு. 2 இஸ்லாமியர்களை அமைச்சராக்கி இச்சமுதாயத்திற்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது திமுக.
உலமா நலவாரியம், வேலை வாய்ப்பில் 3.5 சதவீதம் இட ஓதுக்கீடு வழங்கியுள்ளது. திருமண பதிவு சட்டம் பிரச்சனை இல்லாத அளவுக்கு திருத்தப்படும்.
சிறுபான்மையினருக்காக குரல் கொடுத்தால் சில நேரங்களில் தி்முக சேதரங்களை சந்தித்துள்ளது. இஸ்லாமியர்களையும், திமுகவையும் பிரித்து விட வேணடுமென சில நினைக்கின்றனர். அது முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications