மாயமான விடைத்தாள்கள் - வலை வீசி தேடி வரும் சென்னை பல்கலைக்கழகம்
சென்னை: சென்னை பல்கலைக்கழம் எந்த அளவுக்கு ஜாக்கிரதையுடன் செயல்படுகிறது என்பது அம்பலமாகியுள்ளது.
15 மாணவர்களின் விடைத்தாள்களை காணவில்லை. அதை கடந்த 8 மாதமாக வலை வீசி தேடி வருகிறார்களாம். துணைவேந்தர் முன்பு இது அம்பலமாகி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த சம்பவம்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ஜி.திருவாசகம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றார். அன்று முதல் சென்னை பல்கலைக்கழக மாணவர்களின் குறைகளை மாதத்தின் முதல் திங்கட்கிழமை கேட்டு வருகிறார். மாணவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து முடிந்தவரை உடனுக்கு உடன் தீர்த்து வருகிறார்.
நேற்று மாணவர்களின் குறையை கேட்க சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இயக்குனர் மோகன்ராம் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு மாணவராக அழைக்கப்பட்டனர்.
துணைவேந்தர் திருவாசகம் குறைகளை விவரமாக கேட்டார். சில மாணவர்கள் தங்களுக்கு சான்றிதழ் வரவில்லை என்றும் சில மாணவர்கள் தேர்வு எழுதியும் எங்களுக்கு ஆப்சென்ட் என்று சான்றிதழில் போடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
மாணவர்கள் அளித்த புகார்களுக்கு உடனுக்கு உடன் அதிகாரிகளை அழைத்து பதில் அளித்தார். அதனால் பல மாணவர்கள் திருப்தியுடன் சென்றனர்.
சில மாணவர்கள் கூறுகையில் பல முறை அலைந்தும் சம்பந்தபட்ட செக்ஷன்களில் சரியான பதில் வருவதில்லை என்றும் அவ்வாறு பதில் அளித்தாலும் 10 நாட்கள் கழித்து வரச் சொல்வார்கள். அவர்கள் சொன்ன தேதியில் சென்றால் மீண்டும் 10 நாள் கழித்து வரச் சொல்வார்கள் என்றும் தெரிவித்தனர்.
இதை விட மோசமான புகார் துணைவேந்தர் முன்பு வைக்கப்பட்டது. சோழிங்கரை சேர்ந்த ஒரு மாணவி வந்தார். அவர் பி.லிட் தமிழ் இலக்கியம் படிப்பதாகவும் கடந்த ஜுன் மாதம் தேர்வு எழுதியதற்கு இதுவரை ஒரு பாடத்திற்கு தேர்வு முடிவு வரவில்லை என்றும் 5 முறை வந்து சென்றதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து உடனே அருகில் உள்ள அதிகாரிகளிடம் துணைவேந்தர் விசாரித்தார். அப்போது அந்த அதிகாரிகள் தெரிவிக்கையில், அந்த மாணவி மட்டுமல்லாமல் மொத்தம் 15 பேரின் விடைத்தாள் கட்டைக் காணவில்லை. அதை தொடர்ந்து தேடி வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு துணைவேந்தர் அதிர்ச்சி அடைந்தார்.
இவ்வளவு அஜாக்கிரதையாக சொல்கிறீர்களே என்று கடிந்து கொண்ட அவர் உடனடியாக அதைத் தேடிக் கண்டுபிடியுங்கள் என்று உத்தரவிட்டார்.
பின்னர் துணைவேந்தர் பேசுகையில், -
மாணவ-மாணவிகளுக்கு சிரமம் கொடுக்காதீர்கள். அவர்களை அலைக்கழிக்காதீர்கள். அவர்கள் ஒவ்வொரு செக்ஷனுக்கும் செல்ல அனுமதிக்கக் கூடாது. தினமும் இதற்காக மாலை 2 மணி நேரம் ஒதுக்கி மாணவர்களின் குறைகளை ஒரு கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து அவற்றை நிவர்த்தி செய்யவேண்டும்.
ஒரு மாணவர் பி.காம். எடுத்து 2 வருடம் படித்துவிட்டு 3-வது வருடம் பி.எஸ்சி.கணிதம் எடுத்து படிக்கும் முறை இங்கு அமலில் உள்ளது. அதாவது அவர் மீண்டும் முதல் வருடத்தில் இருந்து கணிதம் எடுத்து படிக்கலாம். ஆனால் அவரை 3-வது ஆண்டு பி.எஸ்சி. கணித மாணவர் என்பதை எப்படி ஏற்க முடியும். இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் தொலை தூரக்கல்வியில் செமஸ்டர் அல்லாத முறையில் கேட்கப்படும் கேள்விகள் போல ஏ பிரிவு பி பிரிவு என்று மட்டுமே இருக்கவேண்டும்.
அதுபோல விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய வசதி உண்டு. ஆட்கள் பற்றாக்குறையும் உடனடியாக போக்கப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் இன்னும் 3 மாதத்திற்குள் 136 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார் திருவாசகம்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications