ஜெ சொத்து வழக்கு-18ம் தேதி சாட்சிகள் மறுவிசாரணை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 42 சாட்சிகளிடம் வரும் 18ம் தேதி மறுவிசாரணை நடத்த பொங்களூர் தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்குகள் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தன.

இதில் லண்டன் ஹோட்டல் வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி அந்த வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்றது.

இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா, சசிகலா, தினகரன், சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை மட்டும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக 45 சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஆஜபான வக்கீல் ஆச்சார்யா மனுதாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை கடந்த 25ம் தேதி நீதிபதி மல்லிகார்ஜூனய்யா விசாரித்தார். 45 சாட்சிகளை மறு விசாரணை செய்ய அனுமதி அளித்தும் உத்தரவிட்டார்.

அதனைதொடர்ந்து வழக்கை வருகிற 3ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது 42 சாட்சிகளை 18 முதல் 26ம் தேதிக்குள் மறு விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி மல்லிகார்ஜூனய்யா கூறினர்.

ஏற்கனவே தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கையும் ரத்து செய்யக்கோரி ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+