உ.பியைச் சேர்ந்த பயங்கர ரவுடி சென்னையில் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: உ.பியைச் சேர்ந்த பயங்கர ரவுடியை சென்னையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
உ.பி. மாநிலம், உன்னாப் மாவட்டம் காந்தி நகரைச் சேர்ந்தவர் அகமது கான். இவர் கடந்த பத்து வருடத்திற்கு முன்பு சென்னை வந்தார்.
வட பெரும்பாக்கத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அரவை நிறுவனத்தை தொடங்கினார்.
ஆனால் இவர் உ.பி.யில் பயங்கரமான ரவுடியாம். அங்கு அகமது கான் மீது, கொலை, ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்பட 37 வழக்குகள் உள்ளனவாம்.
அகமது கானை போலீஸார் பல காலமாக தேடி வந்தனர். இந்த நிலையில்தான் அவர் சென்னையில் கடை நடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் சென்னை வந்தனர். சென்னை போலீஸாரின் உதவியுடன் அகமது கானை வட பெரும்பாக்கத்தில் வைத்துப் பிடித்துள்ளனர்.
அவரை உ.பி. கொண்டு சென்று அங்கு அவரை சிறையில் அடைக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications