பிளஸ்-2 தேர்வில் காப்பி: 38 மாணவர்கள் சிக்கினர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் காப்பி அடித்ததாக 38 மாணவர்கள் பிடிபட்டனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ் முதல் மற்றும் 2வது தாள் தேர்வுகள் முடிவடைந்துவிட்டன. நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் காப்பி அடித்ததாக 38 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் விழுப்புரம் மாவட்டத்தில் பிடிபட்டுள்ளனர்.
பிடிபட்ட 22 பேர்களில் 15 பேர் தனித்தேர்வர்கள். 7 பேர் பள்ளிக்கூட மாணவர்கள். கடலூர் மாவட்டத்தில் 9 மாணவர்கள் பிடிபட்டனர்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்சி, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாணவர்களும் பிடிபட்டனர்.












Click it and Unblock the Notifications