டபிள்யூ.ஆர்.வரதராஜன் கொலை செய்யப்பட்டாரா - மறுக்கிறது போலீஸ்
சென்னை மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ. ஆர்.வரதராஜன் கொலை செய்யப்பட்டிருப்பதாக மக்கள் தொலைக்காட்சி பரபரப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்தக் கூற்றை காவல்துறை மறுத்துள்ளது.
வில்லிவாக்கம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டபிள்யூ. ஆர்.வரதராஜன் தனது வீட்டிலிருந்து மாயமானார். 2 கடிதங்களை அவர் விட்டுச் சென்றிருந்தார்.
அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரது அழுகிப் போன உடலை போரூர் ஏரியிலிருந்து போலீஸார் மீட்டனர்.
இது தனது கணவர்தான் என்று வரதராஜனின் மனைவி சரஸ்வதி உடலை அடையாளம் காட்டினார். இதையடுத்து இறந்தது வரதராஜன்தான் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியது. இந்த வழக்கை தற்போது மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வரதராஜன் நீரில் மூழ்கி தற்கொலை செய்திருக்கலாம் என்று பொதுவான கருத்து உள்ளது. இந்த நிலையில் நேற்று மக்கள் தொலைக்காட்சி புதிய செய்தி ஒன்றை ஒளிபரப்பியது.
அதில், வரதராஜன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மாறாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய கழுத்தை கயிற்றாலோ அல்லது ஏதாவது ஒரு பொருளாலோ கடுமையாக இறுக்கி மூச்சுத் திணறடித்துக் கொலை செய்துள்ளதற்கான ஆதாரம் பிரேதப் பரிசோதனையில் கிடைத்துள்ளது.
கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக வரதராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. என்.வரதராஜனுக்குப் பிறகு கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு டபிள்யூ. ஆர்.வரதராஜன் வருவதற்கே வாய்ப்பு இருந்தது.
ஆனால் அவரை அந்தப் பொறுப்புக்கு வர விடாமல் தடுக்க நினைத்த ஒரு பிரிவினர்தான் தொடர்ந்து அவருக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர் என்றும் அந்த செய்தி கூறியது.
இந்தப் புதிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இதை போலீஸார் நிராகரித்து விட்டனர். வரதராஜனின் வயிற்றுக்குள் தண்ணீர் இருந்தது பிரேத பரிசோதனையின் ஆரம்ப கட்ட விசாரணையில் உறுதிபட தெரிய வந்துள்ளது என்றும், கொலை செய்யப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டால், வயிற்றுக்குள் ஏரி தண்ணீர் போக வாய்ப்பு இல்லை என்றும், மேலும் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை என்றும், போலீசார் தெரிவித்தனர். இறுதி அறிக்கை வந்த பிறகுதான், இது பற்றி சொல்ல முடியும் என்றும் போலீசார் மேலும் தெரிவித்தனர்.
இருப்பினும் வரதராஜன் குறித்த புதிய செய்தி, அவரது இறப்பின் பின் மறைந்துள்ள மர்மத்தை மேலும் சிக்கலாக்கும் வகையில் அமைந்துள்ளது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications