பென்னாகரம் - தேமுதிக வேட்பாளர் இரண்டு முறை வேட்புமனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
பென்னாகரம்: பென்னாகரத்தில் தேமுதிக வேட்பாளர் காவேரி வர்மன் இரண்டு முறை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த மார்ச் 3ம் தேதி முதல் தொடங்கியது.
திமுக, அதிமுக, பாமக, மற்றும் தேமுதிக, ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர்.
இந்த நிலையில், தேமுதிக வேட்பாளர் காவேரிவர்மன், நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஒரு வேட்பாளர், 4 முறை மனு தாக்கல் செய்யலாம் என்ற விதிமுறையின் அடிப்படையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியான மாவட்ட வருவாய் அதிகாரி மகேஸ்வரியிடம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications