பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் இடத்தில் வெற்றிச் சின்னம்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் இடத்தில் சிங்கள ராணுவம் வெற்றிச் சின்னம் அமைத்து வருகிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் உடனான போர் கடந்த ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. அப்போது நடந்த சண்டையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

பிரபாகரன் உடல், முல்லைத் தீவு மாவட்டம் நந்திக் கடல் ஏரிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக, பிரபாகரன் கொல்லப்பட்ட நந்திக் கடல் ஏரி அருகே இலங்கை ராணுவம் வெற்றிச் சின்னம் அமைத்து வருகிறது.

இதற்கிடையே, இறுதிக் கட்ட போர் நடைபெற்ற புதுக்குடியிருப்பு, விஸ்வமடு, புதுமத்தளம் ஆகிய பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணி இன்னும் முடிவடையவில்லை.

இதனால் அப்பகுதிகளில், தமிழர்கள் யாரும் குடியேற்றம் செய்யப்படாமல் வெறிச்சோடி போய்க் கிடக்கின்றன.

அதே சமயத்தில், முல்லைத்தீவு கடல் பகுதியில் வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்களை குடியேற்றுவது குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+