Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணி நிரந்தரம் கோரி கல்லூரி விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: பணி நிரந்தரம் செய்யக் கோரி, அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான 51 கல்லூரிகளில், தொகுப்பூதிய அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதில், கடந்த 2003-04ம் ஆண்டில் 1,056 பேர் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு மாதந்தோறும் தலா 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தொகுப்பூதியம் 6,000 ஆக உயர்ந்தது.

இவர்கள், ஏழு ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையிலேயே பணியாற்றுவதாகவும், பணி நிரந்தரம் செய்யக்கோரி உயர்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, தேர்தல் அறிக்கையில், அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அரசு உறுதியளித்தது.

ஆனால் அறிவித்த படி விரிவுரையாளர்களை அரசு நிரந்தரமாக்க வில்லை. இதனால், கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, இன்று முதல் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவி்த்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+