தேர்வுத் தோல்விக்கு அரசே காரணம்-30,000 ஆசிரியர் பயற்சி மாணவர்கள் அதிர்ச்சிப் புகார்
கோவை: ஆசிரியர் பயிற்சித் தேர்வில் கடந்த ஆண்டு 30 ஆயிரம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதற்கு அரசுதான் காரணம், வேண்டும் என்றே தோல்வி அடையச் செய்து விட்டதாக அவர்கள் அதிர்ச்சிப் புகாரை கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டில் தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வு எழுதியவர்களில் 69 சதவீதம் பேரை, திட்டமிட்டே அரசு, தோல்வி அடையச் செய்துள்ளதாக பெரும் புகார் கிளம்பியுள்ளது.
008-2009 கல்வியாண்டிற்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வு, 2009 ஜூனில் நடந்தது. தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 120 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வில் 50 மதிப்பெண் பெற்றால் மட்டுமே, தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள், பிப்ரவரி 27ம் தேதி வெளியானது.
இதைப் பார்த்த மாணவர்களில் பெரும்பாலானோர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், கிட்டத்தட்ட 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறவில்லை. வெறும் 31 சதவீதம் பேர் மட்டுமே பாஸ் ஆகியுள்ளனர்.
இது தமிழகம் முழுவதும் ஆசிரியர் பயிற்சி தேர்வை எழுதிய மாணவ, மாணவியரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அரசு பெருமளவில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதனால் ஆசிரியர் பயிற்சியை முடிக்க தமிழகத்தில் பெரும் ஆர்வம் உள்ளது. இதனால் பலரும் சேர்ந்து படித்து வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் இந்தப் படிப்புக்கு வருவோரில் முக்கால்வாசிப் பேர் ஏழை, நடுத்தர வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். இந்த நிலையில் பெருமளவிலானவர்களை பெயில் ஆக்கியுள்ளதால், ஒரு வருடப் படிப்பும், செலவும் வீணாகி, பதிவு மூப்பும் பறிபோவதாக அவர்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலைக்கு அரசுதான் காரணம் என்று இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கல்வியாண்டு துவங்கிய பின், ஐந்து மாதங்கள் கழித்தே பாடநூல் வழங்கினர். புதிய பாடத்திட்டம், கலைத் திட்டம் உருவாக்கப்பட்டன, வினாத்தாள் அமைப்பு மாற்றப்பட்டது என இதற்கான காரணங்களையும் இந்த அமைப்பு அடுக்குகிறது.
கடந்த ஆண்டில் 40 மதிப்பெண்ணுக்கு ஒரு மதிப்பெண் கேள்வியும், 60 மதிப்பெண்ணுக்கு தியரி பிரிவும் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டில், முழுக்க முழுக்க தியரி முறையில் மட்டுமே கேள்விகள் இருந்ததாகவும் மாணவ, மாணவியர் குறை கூறியுள்ளனர்.
மேலும் தேர்வு முடிந்து கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் வரை முடிவை வெளியிடாமல் இருந்தது குறித்தும் மாணவ, மாணவியர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் மாணவ, மாணவியர் கூறியுள்ளனர்.
மேலும், கோவையைச் சேர்ந்த ஐந்து ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் இது தொடர்பாக கலெக்டரைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications