உணவுப் பணவீக்கம் லேசாகக் குறைந்தது!
டெல்லி: உணவுப் பணவீக்கத்தின் அளவு கடந்த வாரத்தைக் காட்டிலும் லேசாகக் குறைந்துள்ளது.
பிப்ரவரி 27ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 17.87 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், அதற்கடுத்த வாரம் 17.81 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அத்யாவசியப் பொருள்களின் விலைவாசியில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்றாலும் ஒரு உணவுப் பொருள்களில் விலையில் ஏற்பட்டுள்ள லேசாந மாறுதல் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வரும் வாரங்களில் மேலும் கூட இந்த விலை நிலைகளில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கிறது நிதி அமைச்சகம். காரணம் அறுவடைக்காலம் முடிந்து புதிய விளை பொருள்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதால் உச்சத்திலிருந்து வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது.
அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறையத் துவங்கியுள்ளது. ஆனால் பால் மற்றும் குறிப்பிட்ட சில காய்கறிகளின் விலை மட்டும் உயர்ந்து வருகிறது.
பெட்ரோலியப் பொருள்களின் விலையை மத்திய அரசு உயர்த்திய பிறகு பல்வகைப் பொருள்களும் 6 சதவீத விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications