இஎஸ்ஐ வழக்குகளை விரைந்து முடிக்க பொதுமன்னிப்பு திட்டம்
நெல்லை: வழக்குகளை விரைந்து முடிக்க ஆலை உரிமையாளர்களுக்கு இஎஸ்ஐ கார்ப்பரேஷன் பொது மன்னிப்பு திட்டத்தை அறிவித்துள்லது.
இதுகுறித்து நெல்லை துணை மண்டல இஎஸ்ஐ இணை இயக்குநர் ரவிசந்திரன் விடுத்துள்ள அறிக்கை..
இஎஸ்ஐ கார்ப்பரேஷன் பொதுநலனை கருத்தில் கொண்டு நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க ஆலை உரிமையாளர்களுக்கு பொதுமன்னிப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
கடந்த 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை அமுலில் இருக்கும்.
இஎஸ்ஐ சந்தா செலுத்தாமல் அதற்குரிய ஆவணங்களை சரி பார்க்காமல் உள்ள ஆலை உரிமையாளர்கள் குறிப்பிட்ட சில உறுதிமொழி கொடுத்தால் அவர்கள் மீது இஎஸ்ஐ சட்டம் 85ன் படி தொடரப்பட்டுள்ள அனைத்து குற்ற வழக்குகளும் வாபஸ் பெறப்படும்.
மேலும் தவறான வாக்குமூலம் கொடுத்து இஎஸ்ஐ கார்ப்பரேசனில் அதிக உதவி தொகை பெற்ற தொழிலாளர்கள் அந்த பணத்தை திரும்ப செலுத்த உறுதிமொழி கொடுத்தால் இஎஸ்ஐ சட்டம் 84ன்படி அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள குற்ற வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
இதை தவிர இஎஸ்ஐ நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் சிவில் வழக்குகளுக்கும் விரைந்து தீர்வு காண ஆலை உரிமையாளர்கள் இஎஸ்ஐ கார்ப்பரேசனை அணுகி பொதுமன்னிப்பு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பயன்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications