வளைகுடா நாடுகளில் வேலையிழப்பு: 1.73 லட்சம் மலையாளிகள் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட வேலை இழப்புகளால் கேரளாவைச் சேர்ந்த 1.73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் கேரள சட்டப்பேரவையில் எழுத்துப் பூர்வமாக நேற்று அளித்த பதில்:
கடந்த 2008 அக்டோபரிலிருந்து 2009 ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் 1.73 லட்சம் கேரளத்தினர் வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட வேலையிழப்புகளால் ஊர் திரும்பியுள்ளனர்.
இவர்களில் 37,000 பேர் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வேலையிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு, நலவாழ்வு திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது," என அந்த பதிலில் தெரிவித்துள்ளார் அச்சுதானந்தன்.












Click it and Unblock the Notifications