மதுரை: லஞ்சப் புகாரில் சிக்கிய எஸ்ஐ சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
மதுரை: லஞ்சப்புகாரில் சிக்கிய போலீஸ் எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை ஊமச்சிக்குளம் காவல் நிலைய எஸ்ஐயாக இருப்பவர் சந்திரன். இவர் வரும் 31 ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
இந்த நிலையில் இவரை, லஞ்சப் புகார் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்து, மாவட்ட எஸ்பி மனோகர் உத்தரவிட்டுள்ளார்.
எஸ்ஐ சந்திரன் 2004 ல், திருமங்கலம் பகுதியில் பணியாற்றிய போது, லஞ்சப்புகாரில் சிக்கி, சஸ்பெண்ட் ஆனார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதனிடையே சந்திரனை, விசாரணை செய்வதற்கு ஏதுவாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டராங்கள் தெரிவிக்கின்றது.












Click it and Unblock the Notifications