தலிபான்கள் கடத்தலாம் என அச்சம்- ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி: தலிபான்கள் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகள் கடத்தக் கூடும் என்ற அச்சம் காரணமாக காபூலுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இந்தியர்களையும், இந்தியர்களின் சொத்துக்களையும், தூதரகத்தையும் குறி வைத்து தொடர்ந்து தாக்கி வருகின்றனர் தீவிரவாதிகள்.
இந்த நிலையில் தலிபான்கள் அல்லது அல் கொய்தாவினர், ஏர் இந்தியா விமானங்களைக் கடத்தக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காபூலுக்கு வரும், காபூலிலிருந்து செல்லும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன.
விமானத்தில் ஏற்றப்படும் அனைத்து லக்கேஜ்களும் மிகத் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு விமானத்துக்கும் 2 அடுக்குப் பாதுகாப்பு போடப்படுகிறது.
இந்தியாவிலிருந்து வாரத்திற்கு ஆறு முறை காபூலுக்கு ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications