என்எல்சி நிறுவன வளாகத்தில் கொள்ளை முயற்சி தடுப்பு !
சிதம்பரம்: என்எல்சி வளாகத்தில் கொள்ளையடிக்க முயன்ற 30 பேர் கொண்ட கும்பலை போலீசார் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்எல்சியில் முதல் சுரங்க வளாகத்தில், சுரங்க பணிகளுக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தரமான செப்பு கம்பிகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
இந்த உயர்தரமான செப்பு கம்பிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையை காவலர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த செப்பு கம்பிகளை திருடும் நோக்கில் 30 பேர் கொண்ட கும்பல் வளாகத்தில் புகுந்து, அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த செப்பு கம்பிகளை திருட முயன்றனர்.
இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தேவதாஸ் தடுக்க முயன்ற போது, தேவதாசை அரிவாளால் வெட்ட முயன்றனர்.
இதனால் காவலர் தேவதாஸ் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் 3 முறை வானத்தை நோக்கி சுட்டார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 30 பேர் கொண்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications