பிஜி தீவை கடும் புயல் தாக்கியது-அவசரநிலை அமல்
கவா: பிஜி தீவில் கடுமையான புயல் மழை தாக்கியுள்ளது. சூறைக்காற்று மற்றும் மழை வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்து ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு உள்ள குட்டித் தீவு நாடான பிஜியில் 48 சதவீதம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
இந்த பசிபிக் தீவுப் பகுதியில் நேற்று 'டோமாஸ்' புயல் கடுமையாக தாக்கியது. மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைகாற்றுடன் பலந்த மழையும் பெய்தது.
இதனால் பிஜி தீவு முழுவதும் வெள்ளக்காடானது. 2 நாளில் 14 அங்குல மழை பெய்துள்ளது. புயல் தாக்கியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்தன.
வீடுகளை இழந்து 17 ஆயிரம் பேர் தவிக்கின்றனர். அவர்களை 250 மையங்களில் தங்க வைத்துள்ளனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் தாக்கியதை அடுத்து நாட்டில் பேரழிவு சம்பவத்தை ஒட்டிய அவசர கால சட்ட நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications