கொழும்பு காவல் நிலையங்களில் தமிழிலும் புகார் அளிக்க அனுமதி
Subscribe to Oneindia Tamil

தமிழில் தரப்படும் புகார்களை படித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல்துறையினருக்குப் பயிற்சி அளிக்கவும் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை வெலிகடா சிறையில் திங்கள்கிழமை முதலே அமல்படுத்த தொடங்கியுள்ளனர். பிற காவல் நிலையங்களிலும் இது விரைவில் அமலாகவுள்ளதாம்.
கொழும்பு மற்றும் சுற்றுப்பகுதிகளில் தமிழர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இதுதவிர, போர் உச்சத்தில் இருந்தபோது ஏராளமான தமிழர்கள் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளபோதும் கொழும்பு காவல் நிலையங்களில் சிங்களத்தில் மட்டுமே புகார்களைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில்தான் தமிழிலும் புகார் தரலாம் என ராஜபக்சே அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications