பாகிஸ்தான் கடற்படை ஏவுகணை சோதனை
இஸ்லாமாபாத்: இந்த மாத்தில் மட்டும் இதுவரை தொடர்ச்சியாக இரண்டு ஏவுகணைகளை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.
எதிரிகளின் போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.
கடந்த 2ம் தேதி வடக்கு அரபிக் கடலில் பாகிஸ்தான் கடற்படை அணிவகுப்பின்போது இந்த சோதனை நடத்தப்பட்டது.
அந்த சோதனை நடத்திய 4 நாட்களில் கடற்படை சார்பில் மேலும் ஒரு ஏவுகணை சோதனை நேற்று நடத்தப்பட்டது. இது தரையில் இருந்து வானில் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.
இதுமிக குறைந்த தூரம் சென்று தாக்க கூடியது. தானியங்கி முறையில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை அதிவேகமாக சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் திறன் கொண்டது.
இதுபற்றி பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கையில், 'இவை போரில் பயன்படுத்துவதற்காக அல்ல. எதிர் தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணை இருப்பதை வெளிப்படுத்தவே இந்த சோதனை நடத்தப்பட்டது' என்றனர்.