For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

9 வயது சிறுவன் ஒரு வருடமாக காணவில்லை - தவிக்கும் குடும்பம்

By Staff
Google Oneindia Tamil News

Ramesh
கரூர்: கடந்த ஆண்டு காணாமல் போனது தங்களது 9 வயது மகனின் நிலை குறித்து அவனது குடும்பத்தினர் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கும்பகோணம் பரஸ்ப சகாய நிதி கிளையில் கரூர் கிளை மேலாளராக இருப்பவர் ஸ்ரீதர். இவரது மகன் ரமேஷ் கடந்த 2009 ம் ஆண்டு காணமல் போய்விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அவரை கண்டுபிடித்து தருமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு மனும் அளித்துள்ளார்.

இந்த நிலையில், காணாமல் போன தனது மகனுக்கு அவரே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

என் அன்பு மகன் ரமேஷ் என்ற இராமசாமிக்கு. உன் மீது அன்பும் பாசமும் வைத்திருக்கும் உன் பெற்றோர் எழுதும் கண்ணீர் மடல். நீ வீட்டை விட்டு சென்றதில் இருந்து உன்னுடைய அம்மா பல இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளார். எப்போதும் உன் நினைவாகவே வாடுகின்றார்.

உன் அக்கா சுபாஷினிக்கு வரும் 11-04-2010 அன்று ரங்கத்தில் திருமணம் நடைபெற உள்ளது. எனவே நீ எங்கிருந்தாலும் உடனே வந்து உன் தாயின் கண்ணீரை துடைக்க வேண்டுகின்றேன்.

இப்படிக்கு, உன் அன்பினால் வாடும் தந்தை ,
ஸ்ரீதரன், எண் - 2 1 மல்லிகை பூ அக்ரஹாரம்,
மூன்றாம் தெரு, ரங்கம், திருச்சி,
செல் எண் - 99408 66567 , 98654 82064 என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீதரன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X