3 ஜி ஏலத்தில் ஏர்டெல்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 3 ஜி அலைவரிசைக்காக மத்திய அரசு நடத்தும் ஏலத்தில் முன்னணி தனியார் தொலைபேசி நிறுவனமான ஏர்டெல் பங்கேற்கிறது.
ஏப்ரல் 9-ந்தேதி தொடங்கும் இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை இந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. இதனை பார்தி ஏர்டெல் நிறுவன அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.
ஏலத்தில் வெற்றிபெறும் விண்ணப்பதாரர்கள் 2010 செப்டம்பர் முதல் வணிகரீதியில் 3ஜி சேவைகளை வழங்க அனுமதிக்கப்படுவார்கள்
3ஜி ஏலத்தில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அளிக்க மார்ச் 19 கடைசி தேதியாகும். வோடபோன்-எஸ்ஸார், டாடா டெலிசர்வீஸஸ், ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களது விண்ணப்பங்களை நாளைக்குள் சமர்த்துவிடுவார்கள் என தெரிகிறது.
3 ஜி ஏல விற்பனை மூலம் 35,000 கோடியைத் திரட்டுகிறது மத்திய அரசு. இதன்மூலம் நிதிப் பற்றாக்குறையை சரிசெய்யத் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications