மணியார்டர் மோசடி-தபால்காரர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மணியாடரில் வந்த பணத்தை மோசடி செய்த போஸ்ட்மேன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி, வல்லநாடைச்சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவர், சேலத்திலிருந்து தனது மனைவிக்கு மணியார்டர் மூலம், ரூ 350 அனுப்பி உள்ளார்.
ஆனால், அந்த பணம், அவரது மனைவிக்கு உரிய காலத்தில் சென்று சேரவில்லை என்று கூறப்படுகின்றது. இது குறித்து, சுரேஷ்பாபு, தூத்துக்குடி எஸ்.பி. செந்தில்குமாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அந்த பணத்தை வல்லநாடு போஸ்ட் ஆபீசில் பணிபுரியும் போஸ்ட்மேன் கனகராஜ் மோசடி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, போஸ்ட்மேன் கனகராஜ் மீது முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும், பல்வேறு மோடிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications