சட்டசபை கூட்டத்தொடர் 26ம் தேதி வரை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

Secretariat
சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டசபையில் இன்று தமிழக அரசின் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்தார்.

இதுவரை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த சட்டசபைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அண்ணா சாலையையொட்டியுள்ள, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தி்ல் எழுப்பப்பட்டுள்ள புதிய சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது.

புதிய சட்டசபை வளாகமும் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

முழு வீச்சில் கடைசி நேர ஏற்பாடுகள்...

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி புதிய சட்டசபையில் முழு வீச்சில் கடைசி நேர வேலைகள் நடந்து முடிந்தன.

இருக்கைகள், மைக் உள்ளிட்டவையும் பொருத்தி முடிக்கப்பட்டன.

முதல்வரும், நிதியமைச்சர் அன்பழகமும் ஒன்றாக அமரும் வகையில் அவர்களது இருக்கைகள் இரட்டை இருக்கைகளாக அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான அறைகளும் தயாராகி விட்டன. கருணாநிதி அறையில் செய்யப்பட்டுள்ளதைப் போலவே ஜெயலலிதாவின் அறையும் சிறப்பாக தயார்படுத்தப்பட்டுள்ளதாம்.

இந் நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் சபாநாயகர் ஆவுடையப்பன், சட்டசபை கூட்டத் தொடர் மீண்டும் வரும் 26ம் தேதி கூடும் என்றும் அதுவரை கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என்றும் அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+