பிரியாணி கடைக்கு 'தலப்பாக்கட்டு' பெயரை பயன்படுத்த தடை!
சென்னை: சென்னையில் 'தலப்பாக்கட்டு' என்ற பெயரில் பிரியாணிக் கடை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த தலப்பாகட்டி நாயுடு ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டலின் பங்குதாரர் நாகசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் '1957ம் ஆண்டு எனது தந்தை தனபாலன் தலப்ப கட்டி நாயுடு என்ற பெயரில் திண்டுக்கல்லில் பிரியாணி கடை தொடங்கினார். எங்கள் கடையின் பிரியாணி அதிக சுவை கொண்டது.
தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலம் ஆனதாகும். கோவை, திண்டுக்கல், வத்தலக்குண்டு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் எங்களுக்கு கிளைகள் உளளன. இந்த பெயரை நாங்கள் சட்டப்பூர்வமாக பதிவு செய்து வைத்திருக்கிறோம்.
ஆனால் தற்போது சென்னையில் சுமார் 17 பிரியாணி கடைகளில் வர்த்தக ரீதியாக எங்கள் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்துகின்றனர்.
தலப்பா கட்டி என்ற பெயரை தலப்பா கட்டு என மாற்றி பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. இதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் இவ்வழக்கை விசாரித்தார்.
சென்னையில் உள்ள 17 பிரியாணி கடைகள் தலப்பா கட்டு பெயரை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications