தூத்துக்குடியில் ரூ 275 கோடியில் தனியார் மின் உற்பத்தி நிலையம் துவக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.275 கோடியில் தனியார் மின் உற்பத்தி நிலையம் துவக்கப்படவுள்ளது.
இது குறித்து கோல் மற்றும் ஆயில் நிறுவன முதன்மை அதிகாரி அகமது ஏ.ஆர்.புகாரி மற்றும் தைசன் குரூப் இந்திய நிறுவன நிர்வாக இயக்குனர் துரைசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடியில் கோல் மற்றும் ஆயில் குரூப்பை சேர்ந்த கோஸ்டல் எனர்ஜன் நிறுவனம் 1,200 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து வருகிறது.
இதற்கான கட்டுமான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் ரூ.5,100 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின் உற்பத்தி நிலையத்தில் ரூ.275 கோடி செலவில் நிலக்கரி கையாளும் அமைப்பு நிறுவப்படுகிறது. மேலும், இதற்கான பணி ஆணை ஜெர்மன் நிறுவனமான தைசன் குரூப் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சீனாவில் இருந்து ரூ.200 கோடியில் பாய்லர் டர்பைன் ஜெனரேட்டர்கள் வாங்க உள்ளோம் என்றனர்.