7 மாநிலங்களில் 48 மணிநேர பந்தை குண்டு வெடிப்புடன் ஆரம்பித்த மாவோயிஸ்ட்!

பந்த் துவங்குவதாக அறிவித்த சில நிமிடங்களில் மேற்கு வங்க ரயில்வே லைனில் குண்டு வெடிப்பு, ஜார்க்கண்ட் பாலம் தகர்ப்பு என வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினர். இதனால் இந்த மாநிலங்களில் ரயில்கள் மற்றும் தரைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பாஜப்பா கிராமத்தில் ஒரு சிபிஎம் அலுவலத்துக்கு நேற்று இரவு தீ வைத்துக் கொளுத்தினர் 20-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள். சிபிஎம் ஆதரவாளர்கள் சிலரையும் அடித்து நொறுக்கினர். அவர்கள் வீடுகளும் கொளுத்தப்பட்டன.
பசுமை வேட்டை எனும் பெயரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு ஆரம்பித்துள்ள நடவடிக்கையைக் கண்டித்து இந்த பந்தை மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, ஆந்திரம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார் மற்றும் மகாராஷ்ட்ராவின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இந்த பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த மாநிலங்களில் பல இடங்களில் போக்குவரத்தை நிறுத்த மரங்களை வெட்ட
வீழ்த்தியுள்ளனர் மாவோயிஸ்ட் தீவிரமாதிகள்.
மேற்கு வங்கத்தில் நிலைமை மோசமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications