பாஜக தலைவர் நிதின் கத்காரி ஏப். 10ல் சென்னை வருகை
சென்னை: பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் நிதின் கத்காரி முதல் முறையாக ஏப்ரல் 10ம் தேதி சென்னை வருகிறார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அகில இந்திய பாஜக தலைவராக நிதின் கட்கரி பொறுப்பேற்றதும் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த சுற்றுப்பயணம் வருவதாக அறிவித்து இருந்தார்.
அதன்படி முதல் முறையாக அடுத்த மாதம் 10ம் தேதி சென்னை வருகிறார். அவர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். சுற்றுப்பயணத்தின் போது குடிசை பகுதிகளுக்கு செல்வார். கட்சியின் அடிமட்ட தொண்டரான கிளை தலைவர்கள் வீடுகளுக்கும் நேரடியாக செல்கிறார்.
கட்சி அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடன் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
சென்னையில் 10ம் தேதி நடைபெறும் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக தமிழகத்துக்கு வரும் நிதின் கட்கரியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
10, 11 ஆகிய இரு நாட்கள் சென்னை பயணத்தை முடித்து விட்டு 12ம் தேதி பாண்டிச்சேரி செல்கிறார். அங்கு அந்த மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications