கோல்கத்தா அடுக்குமாடி கட்டிடத்தில் தீ-6 பேர் பலி
கோல்கத்தா: கோல்கத்தா பார்க் ஸ்ட்ரீட்டில் பழங்கால அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று பிற்பகலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இவ்விபத்திதில் 6 பேர் வரை பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கொண்ட இந்த கட்டிடத்தில் ஏராளமான பேர் சிக்கியிருப்பதாக தெரிகிறது.
சுமார் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க போராடி வருகின்றன.
கோல்கத்தாவில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
5வது மாடி லிப்டில் முதலில் தீ பற்றியதாகவும் பின்னர் அது மற்ற கட்டடங்களுக்குப் பரவியதாகவும் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தக் கட்டடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் சி்க்கியுள்ளதாகத் தெரிகிறது.
பகல் 2 மணிக்கு ஏற்பட்ட தீயை இரவு 7 மணி வரை அணைக்க முடியாமல் தீயணைப்புப் படையினர் திணறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications