சென்னையில் மற்றொரு போலி மருந்து குடோன் கண்டுபிடிப்பு
சென்னை: சென்னையில் காலாவதியான போலி மருந்துகள் சேகரிக்கப்பட்ட மற்றொரு குடோன் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையில் காலவாதியான மருந்து விற்பனை மோசடி கண்டுபிடிக்கப்பட்டு கோயம்பேட்டில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு போலீசார் சீல் வைத்தனர்.
தலைமறைவான நிறுவன உரிமையாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் காலாவதியான மருந்துகளை விற்பனைக்காக புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட மற்றொரு மருந்து குடோனை போலீசார் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை, கீழ்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இந்த மருந்து தொழிற்சாலையின் குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த குடோன், காலாவதி மருந்து மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய பிரமுகருக்கு சொந்தமானது என போலீசார் தெரிவித்தனர்.
இதுபோன்ற சோதனைகளை தொடர்ந்து நடத்தி போலி மருந்து குடோன்களை மூடுவதற்கு போலீசாரும், மருந்து கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications