காவி உடையில் தவறு செய்வோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்- பாஜக
நெல்லை: காவி உடை அணிந்து யார் தவறு செய்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
நெல்லையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
விலை உயர்வுக்கு வழிகோளும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யவும், விலைவாசி உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும், 25 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை பாஜக துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 25 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று ஏப்ரல் 21ல் முழுபட்டியலை ஜனாதிபதியிடம் கொடுப்போம்.
காவி உடை மிகவும் புனிதமானது. காவி உடை அணிந்து யார் தவறு செய்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்ட வேண்டும்.
பென்னாகரம் இடைத் தேர்தலில் விதிமுறை மீறல்களை தன்னால் தடுக்கமுடியவில்லை என நரேஷ் குப்தா ஓப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய் விட்டது. அவர் ராஜினமா செய்யலாம் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications