தாய்லாந்து விமானம் கோல்கத்தாவில் அவசரமாக தரையிறங்கியது
Subscribe to Oneindia Tamil
கோல்கத்தா: மும்பையில் இருந்து பாங்காக்குக்கு சென்ற தாய் ஏர்வேஸ் விமானம் கோல்கத்தாவில் அவசரமாக தரையிறங்கியது.
மும்பையில் இருந்து சுமார் 248 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாங்காக் நோக்கி சென்று கொண்டிருந்த தாய் ஏர்வேஸ் விமானம் டிஜி 318, நேற்று நள்ளிரவு நேரத்தில் கோல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக கோல்கத்தா என்எஸ்சி போஸ் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
விமானத்தில் இருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், தாய் ஏர்வேஸின் மாற்று விமானம் விரைவில் கொண்டு வரப்பட்டு பயணிகள் அதில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications