மலேசிய தொழிலதிபர் திருச்சி விமான நிலையத்தில் மரணம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு வந்த மலேசிய நாட்டு தொழிலதிபர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகம்மது அபூபக்கர். 68 வயதான இவர் மலேசியாவில் பல்நோக்கு அங்காடியை நடத்தி வந்தார். நீண்ட காலமாக மலேசியாவில் தொழில் நடத்தி வந்தார். அடிக்கடி இந்தியாவுக்கு வந்து செல்வார்.
விடுமுறையில் சொந்த ஊரான பனைக்குளத்திற்கு வந்திருந்த அபூபக்கர், மலேசியா திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் வந்து பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்த்து.
இதையடுத்து அவரது உடலை போலீஸார் அரசு மருத்துவமனைக்கப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications