ஏப் 20 முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
சென்னை: வரும் ஏப்ரல் 20ம் தேதியிலிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் குதிக்கின்றனர் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு சர்க்கிள் சங்கங்கள் மற்றும் யூனியன்கள் ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்லப்பா வெளியிட்டு உள்ள அறிக்கை:
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் இருந்து உயர் அதிகாரிகள் வரையில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேரை விருப்ப ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும் திட்டம் உள்பட பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிடும்படி கோரி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 20ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய தீர்மானித்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்களின் தர்ணாவும் நடந்தது.
BSNL workers plan strike to protest retrenchment
பிஎஸ்என்எல், ஊழியர்கள், போராட்டம், கோரிக்கைகள், bsnl, protest, employees, strike, telephone
பிஎஸ்என்எல் ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
ஏப் 20 முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
சென்னை: வரும் ஏப்ரல் 20ம் தேதியிலிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் குதிக்கின்றனர் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு சர்க்கிள் சங்கங்கள் மற்றும் யூனியன்கள் ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்லப்பா வெளியிட்டு உள்ள அறிக்கை:
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் இருந்து உயர் அதிகாரிகள் வரையில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேரை விருப்ப ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும் திட்டம் உள்பட பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிடும்படி கோரி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 20ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய தீர்மானித்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்களின் தர்ணாவும் நடந்தது.












Click it and Unblock the Notifications