ரூ 40 கோடியில் இந்தியாவின் முதல் சாஃப்ட்வேர் ஆராய்ச்சி மையம்! - ஆ ராசா

தனது சொந்தத் தொகுதியான நீலகிரியில் நலத்திட்டப் பணிகளைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சர் ஆ ராசா, பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சாஃப்ட்வேர் துறையில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பப் பயிற்சிகளை அளிக்கும் வகையில், புதிய மென்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ 40 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் இந்த மையம், இந்தியாவில் முதல் முறையாக, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அல்லது குன்னூரில் அமைக்கப்படும்.
இதற்கான இடம் தேர்வு குறித்து, நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன், இந்த மையம் அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கப்படும். 2010-11ம் நிதியாண்டுக்கான திட்டத்தில் இது இடம் பெறும்.
இதில், நேரடியாக 500 பேருக்கு வேலைவாய்ப்பும், மறைமுகமாக 1,000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். நாடு முழுவதும் பல மென்பொருள் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு பெருமளவு உதவியாக இந்த ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற சாஃப்ட்வேர் நிபுணர்கள் இதில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
நீலகிரி மாவட்டத்தில் பெரிய கட்டடங்கள் அமைப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதால், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது குறித்து தற்போது எவ்வித முடிவும் சொல்ல முடியாது..." என்றார் ராசா.












Click it and Unblock the Notifications