Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹைதராபாத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைகிறது - மதக் கலவரத்தால் பதட்டம்

Subscribe to Oneindia Tamil

Hyderabad
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் சட்டம் ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஏற்கனவே தெலுங்கானா போராட்டத்தால் திணறிப் போயுள்ள ஹைதராபாத் நகரில் தற்போது மதக் கலவரம் வெடித்துள்ளதால் புதிய பதட்டம் ஏற்பட்டுள்ளது.

தொடர் போராட்டங்களால் ஹைதராபாத் நகரில் இயல்பு நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் தெலுங்கானா போராட்டங்களால் ஏற்கனவே ரணகளப்பட்டுக் கிடக்கும் ஹைதாரபாத்தில் தற்போது புதிதாக மதக் கலவரம் வெடித்துள்ளது.

கோஷாமஹால் பகுதிக்குட்பட்ட நான்கு இடங்களில் இரு பிரிவினருக்கிடையே கடும் மோதல் வெடித்தது. கல்வீச்சு உள்ளிட்ட மோதலில் 36 பேர் காயமடைந்தனர். இந்த மோதல்கள் தொடர்பாக இரு பிரிவையும் சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தெற்கு மண்டலத்தில் 18 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும், மேற்கு மண்டலத்தில், 4 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிலைமை தற்போது கட்டுக்குள் இருந்தாலும் தொர்ந்து பதட்டம் நிலவுவதால் அங்கு ஆயிரம் கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் ரோசய்யா சட்டசபையில் கூறுகையில், தொடர்ந்து நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதுகுறித்து மத்திய அரசுடனும் பேசியுள்ளோம். மத்திய அரசு 10 கம்பெனி புற ராணுவப் படையினரை அனுப்பி வைத்துள்ளது.

அமைதியை நீடிக்கச் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அனைத்துத் தரப்பினரும் பொறுமையும், அமைதியும் காக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசி மூலம் தொடர்புக கொண்டு என்னுடன் பேசி நிலைமையைக் கேட்டறிந்தார் என்றார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில காவல்துறை அமைச்சர் சபீதா ரெட்டி நேரில் பார்வையிட்டார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் சட்டசபையில் வெடித்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மோதல் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு சபாநாயகர் கிரண் குமார் ரெட்டி அனுமதி மறுத்தார்.

இருப்பினும், மஜ்லிஸ் இதாஹுல் இ முஸ்லிமீன் கட்சி உறுப்பினர்கள் கண்டிப்பாக விவாதம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அக்கட்சியின் தலைவர் அக்பருதீன் ஓவைசி கூறுகையில், ஹைதராபாத் பழைய பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. மாணவர்கள் தேர்வு எழுதச் செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. எனவே அரசு தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும். போதிய அளவில் போலீஸ் படையினரை குவிக்க வேண்டும் என்றார்.

கடந்த சனிக்கிழமையன்று ஹைதராபாத்தின் முசாபெளலி பகுதியில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் விழா தொடர்பான பேனர்களை கட்டி வைத்திருந்தனர். அதை இன்னொரு பிரிவினர் அகற்றியதைத் தொடர்ந்து மோதல் வெடித்தது.

இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் கலவரம் பரவியதால் பதட்டம் கூடியது. தற்போது ஹைதராபாத்தில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முக்கியப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+