தேர்தலில் முதலீடு செய்யும் அரசியல் வியாபாரிகள் - ஜவாஹிருல்லா வேதனை
சேலம்: இன்றை கால கட்டத்தில் தேர்தல், முதலீடு செய்யும் தொழிலாக மாறி விட்டது. வியாபாரிகள் முதலீடு செய்வது போல் அரசியல் கட்சியினர் தேர்தலில் முதலீடு செய்கின்றனர். வெற்றி பெற்ற பின்பு, அதற்கான அறுவடை செய்யும் நிலை இன்று உள்ளது என, மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா வேதனை தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மனித நேய மக்கள் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்று முறையான அரசியல் கட்சியாக செயல்பட்டு வருகிறது.
இன்றை கால கட்டத்தில் தேர்தல், முதலீடு செய்யும் தொழிலாக மாறிவிட்டது. வியாபாரிகள் முதலீடு செய்வது போல் அரசியல் கட்சியினர் தேர்தலில் முதலீடு செய்கின்றனர். வெற்றி பெற்ற பின்பு, அதற்கான அறுவடை செய்யும் நிலை இன்று உள்ளது.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் சிறுதொழில் நிறுவனங்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மின்தடையை அரசு உடனே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அஞ்சு குப்தா, நீதிமன்றத்தில் ஆஜராகி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியின் பங்கு குறித்து விளக்கம் அளித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.
லிபரான் கமிஷன், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 68 பேர் குற்றவாளி என, மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையின்படி புதிதாக குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும்.
மத்திய அரசு, வகுப்புவாத கலவர தடுப்புச் சட்டத்தின் மசோதாவை தாக்கல் செய்யும் முன்பு, சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை கழகத்தின் ஆலோசனையைப் பெற்று தாக்கல் செய்ய வேண்டும்.
சிறுபான்மையினருக்கு மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ரங்கநாத மிஸ்ரா அறிக்கையின் பரிந்துரையை மத்திய அரசு உடனே நிறைவேற்ற முன்வரே வேண்டும். இதை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications