ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை பெற வலியுறுத்தி டி.ராஜேந்தர் தலைமையில் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தர வலியுறுத்தியும், விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் லட்சிய திமுக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடந்த இந்தப் போராட்டத்திற்கு கட்சித் தலைவர் விஜய டி.ராஜேந்தர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையைப் பெற்றுத் தர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினையை கைகழுவ முயலக் கூடாது, தமிழர்களை சிங்களர்களுக்கு காவு கொடுக்கக் கூடாது, தமிழக அரசும் தூங்காமல் இருக்க வேண்டும், தமிழினத்தைக் காக்க வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications