லண்டனில் 15 வயது சிறுவனைக் குத்திக் கொன்ற நான்கு மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: கிழக்கு லண்டனில் 15 வயதான சிறுவனை அவனுடன் படித்து வரும் நான்கு மாணவர்களே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹக்னி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அம்ஹர்ஸ்ட் பூங்காவில் சோபியன் கெய்லான் என்ற அந்த மாணவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழந்திருந்தான்.
இந்த சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையுண்ட சிறுவனும், மற்ற சிறார்களும் ஒன்றாகப் படித்து வந்தவர்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications