புதிய சட்டசபையில் பதவியேற்ற முதல் எம்எல்ஏ இன்பசேகரன்
சென்னை: பென்னாகரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் இன்பசேகரன், இன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.
இதன்மூலம் புதிய சட்டசபையில் பதவியேற்ற முதல் எம்எல்ஏ என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
புதிய சட்டமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்பசேகரனுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திமுக- அதிமுகவினர் மோதல்-12 பேர் கைது:
இந் நிலையில் கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் பென்னாகரம் தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதிமுகவினரை நோக்கி சிலர் செருப்பை தூக்கி காட்டியுள்ளனர்.
இதையடுத்து விளாங்குறிச்சி அதிமுக ஒன்றியச் செயலாளர் ஆறுகுட்டி தலைமையிலான அதிமுகவினர், திமுகவினரைத் தாக்கினர்.
இச் சம்பவம் தொடர்பாக ஆறுகுட்டி உள்பட 10 அதிமுகவினரும், 2 திமுகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications