பாஜக பிரமுகரின் சமாதியில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
கண்ணூர்: படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகரின் சமாதியை தகர்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை போலீசார் அப்புறப்படுத்தினர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பாஜக மற்றும் சிபிஎம் தொண்டர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
கடந்த 2005ம் ஆண்டில் பாஜக பிரமுகரான சூரஜ் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மர்ம கும்பலால் கொல்லப்பட்டார்.
இவரின் சமாதி கண்ணூர் அருகே முழாப்பிலாங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சமாதியில் வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டிருப்பதை அக்கட்சியினர் இன்று கண்டுபிடித்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர். சமாதியை தகர்க்க எதிர் கட்சியினர் இந்த வெடிகுண்டை வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications