சென்னை அருகே கொட்டப்பட்ட காலாவதி மருந்துகள் மூட்டை மூட்டையாக சிக்கின
சென்னை: சென்னை அருகே கூடுவாஞ்சேரியில், 2 டன் அளவிலான காலாவதி மருந்துகளை மூட்டை மூட்டையாக கட்டி சாலையோரத்தில் வீசி விட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 3 லாரிகளில் அந்த காலாவதி மருந்துகளைக் கொண்டு வந்து கொட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் காலாவதி மருந்துகளை போலீஸாரும், அதிகாரிகளும் வேட்டையாடி வருகின்றனர். இதனால் காலாவதியான மருந்துகளை ஆங்காங்கு குப்பைத் தொட்டிகளிலும், சாலையோரங்களிலும் கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை அருகே காயிரம்பேடு என்ற இடத்தில், சாலையோரம் 2 டன் அளவிலான காலாவதி மருந்துகளை 3 லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் சென்றுள்ளனர் சிலர்.
மூட்டை மூட்டையாக இவை வீசப்பட்டிருந்த்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுவரை தமிழகத்திலேயே இவ்வளவு அதிகமான காலாவதியான மருந்துகள் ஒரே இடத்தில் கொட்டப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
தகவல் அறிந்து போலீஸாரும், அதிகாரிகளும் விரைந்து வந்தனர். விசாரணையில் மருந்துக் கடைகளிருந்து இவை கொண்டு வரப்படவில்லை என்று தெரிய வந்த்து. உள்ளூர் மக்கள் கூறுகையில், அதே பகுதியில் இருக்கும் மெடோபார்ம் என்ற தனியார் மருந்து நிறுவனம்தான் இதைக் கொட்டியதாக போலீஸாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியபோது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது.
வீசப்பட்ட மருந்துகளில், பெரும்பாலானவை இருமல் டானிக் ஆகும். இவை இருந்த அட்டைப் பெட்டிகளில் பல்வேறு ஊர்களின் மருந்துக் கடைப் பெயர், முகவரிகள் இருந்தன. ஆனால் அவை போலி முகவரிகள் என்பது தெரிய வந்துள்ளது.
இவை காலாவதியான மருந்துகள் மட்டுமல்லாமல் போலி மருந்துகளாகவும் இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம்












Click it and Unblock the Notifications