சென்சஸ்: குடிமக்கள் அனைவரும் பங்கேற்க பிரதமர் மன்மோகன் வேண்டுகோள்
இந்தியாவின் 2011ம் ஆண்டுக்கான தேசிய கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியுள்ளது. முதல் கணக்கெடுப்பு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் இருந்து நேற்று முன்தினம் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து இன்று பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் கணக்கெடுப்பு பணியாளர்களிடம் தனது விவரங்களை வழங்கினார்.
இதன் பின் அவர் நிருபர்களிடம் பேசுகையில், 'தேசிய கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வகுப்பதற்கு மிகவும் உதவிகரமாக அமையும்.
இந்த புள்ளி விவரங்கள் எந்தளவுக்கு துல்லியமாகவும், முறையாகவும் உள்ளதோ அந்தளவுக்கு திட்டங்களை பயன்படத் தக்க அளவுக்கு வகுக்க முடியும்.
எனவே நாட்டு மக்கள் அனைவரும் சென்சஸ் பணிகளில் தங்களின் முழு ஒத்துழைப்பையும் தர வேண்டும்.
குடிமக்கள் அனைவரும் இந்த கணக்கெடுப்பில் தங்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
இதன் மூலம் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்கள் பயனளிக்கத் தக்க வகையில் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும்' என்றார்.