எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு அதிமுக கடும் கண்டனம்- சட்டசபையில் அமளி
Subscribe to Oneindia Tamil
சென்னை: மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் இன்று பென்னாகரத்தில் திமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்துப் பேசியதால் அதிமுகவினர் பெரும் அமளியில் இறங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று தொடங்கிய சட்டசபைக் கூட்டத்தில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் பேசுகையில், தவறான பட்டனை அமுக்காமல் சரியான பட்டனை மக்கள் அமுக்கியதால் புதிய எம்.எல்.ஏ. ஒருவர் இந்த சட்டசபைக்கு வந்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் என்றார்.
இதைக் கேட்டதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து சேகர் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன் குறுக்கிட்டு அதிமுகவினரை சமாதானப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications